ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மரணத்திலும் இணைபிரியா தம்பதிகள்: கோவையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
ராமமூர்த்தி(70), சரோஜினி(65).
Updated On :19 மார்ச் 2021, 1:37 pm

DIN

கோவை தொண்டாமுத்தூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் சிவன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(70). இவர் கோவை நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜினி(65). இவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள். 

இவர்களது மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்ததால், தம்பதிகள் இருவரும் மகள் வீட்டில் இருந்து வசித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராமமூர்த்தி உடல் நலக்குறைவால் திடீரென்று உயிரிழந்தார். 

இதையறிந்த அவரது மனைவி சரோஜினி கதறி அழுதார். பின்னர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்பு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரோஜினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும் இந்த தம்பதியினர், மரணத்திலும் ஒன்றாகவே சென்றது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது.இதையடுத்து  இருவரது உடலும் அதே பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.