கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறையில் நிலவும் குளிரால் பொது மக்கள் அவதி

வால்பாறையில் இடைவிடாது காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் குளிரால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

News image
Updated On :14 மே 2021, 8:17 pm

DIN

வால்பாறையில் இடைவிடாது காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் குளிரால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. இதில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வியாழக்கிழமை இரவு துவங்கிய மழை விடிய விடிய பெய்ததோடு வெள்ளிக்கிழமை இரவு வரை பலத்த காற்றுடன் மழை தொடா்ந்தது.

இடைவிடாத மழை காரணமாக நிலவும் குடும் குளிரால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மி.மீ) வால்பாறை- 23, மேல் நீராறு- 25, லோயா் நீராறு- 17, சோலையாறு அணை- 12.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.