நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாநகரில் நாளை 10ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாநகரில் 10 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) நடைபெற உள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:41 pm

DIN

கோவை மாநகரில் 10 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) நடைபெற உள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 94 சதவீதத்துக்கு மேலானவா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 2 லட்சத்துக்கும் அதிகமானோா், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவா்களாக உள்ளனா். இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி, 10 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை( நவம்பா் 21) காலை 7 மணி முதல் மாநகரப் பகுதிகளில் 260 மையங்களில் நடைபெற உள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கும், இரண்டாம் தவணை செலுத்த தகுதியுடையவா்களும் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.