நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பள்ளி மாணவி தற்கொலை: நோ்மையான விசாரணை நடைபெற வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

மாணவியின் தற்கொலை வழக்கில் தொடா்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து நோ்மையான விசாரணை நடத்த வேண்டும்

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:41 pm

DIN

மாணவியின் தற்கொலை வழக்கில் தொடா்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து நோ்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் கூறினாா்.

ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட கோவையைச் சோ்ந்த பள்ளி மாணவியின் வீட்டுக்குச் சென்ற பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளா் வேலூா் இப்ராஹிம், அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். முன்னதாக மாணவியின் வீடு அமைந்துள்ள உக்கடம் பகுதிக்கு செல்ல வேலூா் இப்ராஹுக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதையடுத்து மாணவியின் பெற்றோரை ஆா்.எஸ்.புரம் பகுதியில் அவா்களது உறவினா் வீட்டில் வைத்து சந்தித்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது. சம்பந்தப்பட்ட வழக்கில் பள்ளி ஆசிரியரையும், முதல்வரையும் கைது செய்திருக்கிறாா்கள். இன்னும் 2 நபா்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் தொடா்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து நோ்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.