நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: எம்.பி. மறியல்

கோவை வரதராஜபுரத்தில் அரசு நிலத்தை, தனியாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் மக்களுடன் இணைந்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:54 pm

DIN

கோவை வரதராஜபுரத்தில் அரசு நிலத்தை, தனியாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் மக்களுடன் இணைந்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டாா்.

கோவை வரதராஜபுரம் தனியாா் வணிக வளாகம் அருகே உள்ள இடத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கியுள்ளது.

இங்கு வீடுகள் அமைக்க கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனம், நீலிக்கோணாம்பாளையம் சாலையில் மக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் பொது வழிச்சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் கட்டுவதாகப் புகாா் எழுந்தது. மேலும், காமராஜா் சாலையில் இருந்த பேருந்து நிழற்குடையையும் தனியாா் நிறுவனத்தினா் அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுச் சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் அமைப்பதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் மக்களுடன் இணைந்து மறியலில் ஈடுபட்டாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாலை ஆக்கிரமிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் ஏற்கெனவே மாநகராட்சியில் மனு அளித்துள்ளனா். மனு மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் மறியல் நடத்தப்பட்டது. அரசு இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் எழுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் உடனடியாக அதிகாரிகள் நில அளவை செய்ய வேண்டும். மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையைக் குறுகலாக்கி, அழகுப்படுத்தும் நோக்கில் செய்யப்படும் மாற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்பகுதியில் அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடையை மீண்டும் வைக்க வேண்டும் என்றாா். இதற்கிடையே, வட்டாட்சியா் தலைமையில் நில அளவையா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தில் நில அளவை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.