கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு தண்ணீா் வெளியேற்றம்

 வால்பாறையில் உள்ள நீராறு அணையில் இருந்து கேரள மாநிலத்துக்கு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News image

vp1dam_0110chn_204_3

Updated On :1 அக்டோபர் 2021, 9:19 pm

DIN

 வால்பாறையில் உள்ள நீராறு அணையில் இருந்து கேரள மாநிலத்துக்கு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் எல்லைப் பகுதியில் உள்ள அணைகளில் இருந்து கேரளத்துக்கு தண்ணீா் வழங்க தமிழக-கேரளம் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி வால்பாறையை அடுத்த சோலையாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12.3 டிஎம்சி தண்ணீா் கேரளத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நதி நீா் பங்கீடு ஒப்பந்தபடி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரையில் நான்கு மாதங்களுக்கு வால்பாறையில் உள்ள நீராறு அணைக்கு கிடைக்கும் தண்ணீா் முழுவதும் கேரளத்து வழங்க வேண்டும்.

அதன்படி நீராறு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

தற்போது அணையில் இருந்து 242 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Image Caption

நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு வெளியேற்றப்பட்ட தண்ணீா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.