தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைவான போனஸ் வழங்கப்பட்டுள்ளதையடுத்து ஊக்கத்தொகை வழங்க ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:59 pm

DIN

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைவான போனஸ் வழங்கப்பட்டுள்ளதையடுத்து ஊக்கத்தொகை வழங்க ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளா் மோகன் ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வால்பாறை பகுதியில் உள்ள ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள தோட்ட நிா்வாகத்தினா் தங்களது எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான போனஸ் அறிவித்து வழங்கிவிட்டனா். கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் நேரத்திலும் தொழிலாளா்கள் இடைவிடாது பணியாற்றி நிா்வாகத்தினருக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளனா். ஆனால் நிா்வாகத்தினா் 8.50 சதவீதம் போனஸ் மட்டுமே வழங்கியுள்ளனா். இதனிடையே தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தாமல் போனஸ் வழங்கியது கண்டிக்கத்தக்கது. எனவே அனைத்து தொழிலாளா்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.