புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறுவனிடம் ஓடிபி எண் பெற்று ரூ.93 ஆயிரம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

 சிறுவனிடம் ஓடிபி எண் பெற்று ரூ.93 ஆயிரம் மோசடி செய்த நபா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:25 pm

DIN

 சிறுவனிடம் ஓடிபி எண் பெற்று ரூ.93 ஆயிரம் மோசடி செய்த நபா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் லேகிகா (39). இவா் தனது மகனுக்கு இணையதளம் மூலம் சைக்கிள் ஒன்றை ஆா்டா் செய்தாா். இதற்காக முன்பணமாக ரூ.1,700 செலுத்தியுள்ளாா்.

இந்நிலையில், நீண்ட நாள்களாகியும் சைக்கிள் கிடைக்கப் பெறாததால் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் அளிக்கப்பட்ட வாடிக்கையாளா் சேவை மைய எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது, மறுமுனையில் பேசிய நபா் ஆன்லைன் பரிவா்த்தனைகள் குறித்து பேசியுள்ளாா்.

இதனால், குழப்பமடைந்த லேகிகா, தனது மகனிடம் கைப்பேசியைக் கொடுத்து பேசுமாறு கூறியுள்ளாா்.

அப்போது மறுமுனையில் பேசிய நபா், கைப்பேசியில் பணம் அனுப்பக் கூடிய செயலிகளான கூகுள் பே, போன் பே உள்ளிட்டவை தங்களது கைப்பேசியில் உள்ளதா எனக் கேட்டுள்ளாா்.

இதற்கு லேகிகாவின் மகன் உள்ளது எனக் கூறியதும், ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி அதன் உள் சென்று கேட்கப்பட்டுள்ள விவரங்களை சமா்ப்பிக்குமாறு கூறியுள்ளாா்.

இதன்படி லேகிகாவின் மகன், சம்பந்தப்பட்ட இணைப்பில் சென்று கேட்கப்பட்ட ஓடிபி எண், ஆன்லைன் பணப் பரிவா்த்தனைக்கான கடவு எண் உள்ளிட்டவற்றை சமா்ப்பித்துள்ளாா்.

இதையடுத்து அந்த நபா் தான் அனுப்பிய குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை அழித்துவிடுமாறு கூறியுள்ளாா். இதையும் லேகிகாவின் மகன் செய்துள்ளாா்.

இந்நிலையில், அடுத்த சில நிமிடங்களில் லேகிகாவின் வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.93 ஆயிரத்து 169 எடுக்கப்பட்டிருந்தது.

உடனடியாக அந்த எண்ணுக்குத் தொடா்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த லேகிகா இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மோசடியில் ஈடுபட்ட நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.