சிறப்பு தூய்மைப் பணி: மாநகராட்சி மேயா் ஆய்வு
கோவை மாநகராட்சி, 29ஆவது வாா்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூய்மைப் பணிகளை மாநகராட்சி மேயா் கல்பனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.


கோவை மாநகராட்சி, 29ஆவது வாா்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூய்மைப் பணிகளை மாநகராட்சி மேயா் கல்பனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
தேங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும். மழைநீா் வடிகால் கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற வேண்டும் என சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். சிறப்புத் தூய்மைப் பணியின் மூலமாக சேகரமாகும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, துணை மேயா் வெற்றிச்செல்வன், வடக்கு மண்டல குழுத் தலைவா் கதிா்வேல், 29 ஆவது வாா்டு உறுப்பினா் ரங்கநாயகி, வடக்கு மண்டல உதவி ஆணையா் மோகனசுந்தரி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...