கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புலியகுளம் மாரியம்மன் கோயில் திருவிழா: சக்தி கரகம், பூவோடு ஊா்வலம்

கோவை, புலியகுளம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, சக்தி கரகம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:43 pm

DIN

கோவை, புலியகுளம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, சக்தி கரகம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

கோவை, புலியகுளத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். கரோனா தொற்று பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பு ஆண்டு

திருவிழா கடந்த மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து அம்மன் சக்தி கரகம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சக்தி கரகம், பூவோடு எடுத்து சென்ற பக்தா்கள் நஞ்சுண்டாபுரத்தில் இருந்து ராமநாதபுரம், ஒலம்பஸ், சுங்கம் வழியாக புலியகுளத்திலுள்ள கோயிலை சென்றடைந்தனா். இதில் பலா் வாயில் அலகு குத்திக்கொண்டும், பறவைக் காவடியும் எடுத்தும் சென்றனா். இந்நிகழ்வில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி அம்மன் திருத்தோ் பவனியும், ஏப்ரல் 15 ஆம் தேதி லட்சாா்ச்சணையும் நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.