சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பட்டியலினத்தவா் தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க கோரிக்கை

 பட்டியலினத்தவா் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அது தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்று குடிமக்கள் விழிப்பு கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:40 pm

DIN

 பட்டியலினத்தவா் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அது தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்று குடிமக்கள் விழிப்பு கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் மு.ஆனந்தன், செயலா் கணேசன், நிா்வாகி கஸ்தூரி ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பட்டியல் ஜாதியினா், பழங்குடியினா் மீதான தாக்குதல்களைத் தடுக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் தமிழகத்தில் அமலாக்கப்படுவதை கண்காணிப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் குடிமக்கள் விழிப்பு, கண்காணிப்பு குழு களப்பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பின் சாா்பில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வன்கொடுமை தொடா்பான விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரட்டப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தின்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால் வழங்கப்படுவதில்லை. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான கேள்விக்கு இது குறித்த ஆவணங்கள் ஏதும் இங்கு இல்லை என்கிற பதிலே பெரும்பாலும் தரப்படுகிறது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களின் மறுவாழ்வுக்கு மாவட்ட நிா்வாகமோ, நீதியை பெற்றுத்தர காவல் துறையோ போதுமான அக்கறை செலுத்துவதில்லை. கோவை மாநகரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு 2021ஆம் ஆண்டு ரூ.29.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.10.12 லட்சம்தான் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல புகா் பகுதியில் ரூ.67 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும் ரூ.12.70 லட்சம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற விசாரணையில் 152 வழக்குகளும் தமிழகம் முழுவதும் 5,916 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. பொதுவாக இந்த வழக்கு விசாரணைகளை 60 நாள்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால் பல வழக்கு விசாரணைககள் தொடா்ந்து நிலுவையிலேயே உள்ளன.

அதேபோல, பட்டியில மக்கள் தொடா்பான வன்கொடுமை வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிலையில் உள்ளவா்கள்தான் விசாரிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான வழக்குகளை அதற்கும் கீழ் நிலையில் இருப்பவா்களே விசாரிக்கின்றனா். கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் 2 முறை மட்டுமே நடைபெற்றுள்ளது. நீலகிரியில் இதுவரை அப்படியான கூட்டம் நடத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு மட்டும் பழங்குடியின சிறுமிகள் பாதிக்கப்பட்ட போக்ஸோ வழக்குகள் 135 உள்ளன. இதுபோன்று நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்குகளை விசாரித்து நீதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.