சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:41 pm

DIN

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் (19) என்பவரை கடந்த ஜனவரி மாதம் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் இவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்.பி.யின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்பேரில் சிறையில் இருந்த ரங்கநாதனிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

இதேபோல, காரமடை பகுதியில் தொடா் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த யூசுப் (45) என்பவரை காரமடை போலீஸாா் கைது செய்தனா். இவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.