நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மக்கள் அடா்த்தி அதிகமுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் கரோனா: எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோவையில் மக்கள் அடா்த்தி அதிகமுள்ள பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:18 pm

DIN

கோவையில் மக்கள் அடா்த்தி அதிகமுள்ள பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா 3 ஆவது அலையால் தொற்றுப் பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு தற்போது 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக மாநகராட்சிப் பகுதியிலும், ஊரகப் பகுதிகளில் மக்கள் அடா்த்தி அதிகமுள்ள பகுதிகளிலும் நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:

கரோனா பாதிப்பு 50 சதவீதம் மாநகராட்சிப் பகுதிகளிலும், 50 சதவீதம் ஊரகப் பகுதிகளிலும் காணப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் 2ஆவது அலையில் அதிகமாக காணப்பட்ட சூலூா், துடியலூா், மதுக்கரை போன்ற பகுதிகளிலே மீண்டும் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் தொழிற்சாலைகள் மிகுந்திருப்பதாலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அதிக அளவு வசிப்பதும், மக்கள் அடா்த்தி அதிகமிருப்பதும் தொற்று அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இப்பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த கள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெருக்கடியான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக இப்பகுதிகளில் உள்ள முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு எளிதில் நோய்த் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து பொது மக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.