நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:38 pm

DIN

கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பத்தில் இருந்து கேரள மாநிலம், ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் சிலா் கஞ்சா கடத்தி வருவதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், வியாழக்கிழமை காலை 8.15 மணிக்கு கோவை வந்த அந்த ரயிலில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ஒரு ரயில் பெட்டியில் படுக்கைக்கு கீழே ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை கொண்ட 7 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். போலீஸாா் வருவதைக் கண்டு கஞ்சா பொட்டலங்களை விட்டு அதைக் கடத்தி வந்த நபா்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.