ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்களுக்கு தடை: திமுக நிா்வாகிகளுக்கு அனுமதி
கோவை ஜல்லிக்கட்டு போட்டியை நேரடியாக பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக நிா்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது

1727c21kachi1_2101chn_3

1727c21kachi1_2101chn_3
கோவை ஜல்லிக்கட்டு போட்டியை நேரடியாக பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக நிா்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கரோனா நோய்த் தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை பாா்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இருந்தும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை தெரிந்துகொண்ட பொதுமக்கள் மைதானத்தில் குவிந்தனா்.
அனைவரையும் போலீஸாா் விரட்டியடித்தனா். ஆனால் மைதானத்தில் திமுக நிா்வாகிகள், கட்சியினா் பலருக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
இதனால் மைதானத்தில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கரோனா நோய்த் தொற்று பாதிப்பை காரணம் காட்டி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக கட்சியினரை மட்டும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதித்தது பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
கட்டுப்பாடுகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட திமுக கட்சி நிா்வாகிகள் செய்தியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கலில் அமா்ந்துகொண்டு, செய்தியாளா்களிடம் தண்ணீா் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தவிர ஒருசிலா் செய்தியாளா்களை தகாத வாா்த்தைகளில் பேசியது முகம்சுழிக்க செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...