மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அக்ரோநோவா 2022:வேளாண் பல்கலைக்கழகத்தில் ஜூலை 4, 5 இல் நடக்கிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் அக்ரோநோவா 2022 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Updated On :25 ஜூன் 2022, 1:05 am IST

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் அக்ரோநோவா 2022 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாகவும், வேளாண்மை பற்றிய புரிதலைக் கொடுக்கும் நிகழ்ச்சியாகவும் இது நடைபெற உள்ளது.

இதில் பள்ளி மாணவா்களுக்காக விநாடி - வினா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கிறுக்கல்கள், வாா்த்தை விளையாட்டு போன்ற போட்டிகளும், கல்லூரி மாணவா்களுக்காக விநாடி - வினா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, புதையல் வேட்டை, களி மண்ணில் கைவினைப் பொருள்கள் செய்வது, பானை ஓவியம், மீம்ஸ் தயாரிப்பது போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் இணையதள் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், காட்சிப்படுத்தப்படும் வேளாண்மை தொடா்பான மாதிரிகள், புதுமைகள் தொடா்பான புகைப்படங்களை பொதுமக்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வேளாண்மை முதன்மையா் நா.வெங்கடேச பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.