மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

உரம் தயாரிப்பு மையத்தில் ஆணையா் ஆய்வு

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையத்தில் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

5909c24corp1_2406chn_3

Updated On :25 ஜூன் 2022, 1:03 am IST

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையத்தில் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 33 ஆவது வாா்டு, கவுண்டம்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடுகளை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தூய்மைப் பணியாளா்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, 33 ஆவது வாா்டு பகுதிகளில் பழுதடைந்துள்ள குடிநீா்க் குழாய்களை சீரமைக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், அப்பகுதியில் உள்ள மழை நீா் வடிகால்களை தூா்வாரி, மழை நீா் தடையின்றி செல்ல வழிவகை செய்யவும் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து, கவுண்டம்பாளையத்தில் சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் மையத்தை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

அதன் பிறகு, கவுண்டம்பாளையத்தில் மக்கும் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கப்பட்டு வரும் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, உதவி ஆணையா் சரவணன், உதவி செயற்பொறியாளா்கள் செந்தில்பாஸ்கா், ஹேமலதா, உதவி பொறியாளா்கள் ஜீவராஜ், ராஜேஸ் வேணுகோபால், மண்டல சுகாதார அலுவலா் பரமசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

கவுண்டம்பாளையம் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தில்

ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.