விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோவை வடவள்ளி அருகே வீடுகளை காலி செய்ய நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் ஒட்டியதால், மாற்று வீடு வழங்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

Updated On :25 ஜூன் 2022, 1:02 am IST

கோவை வடவள்ளி அருகே வீடுகளை காலி செய்ய நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் ஒட்டியதால், மாற்று வீடு வழங்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவை வடவள்ளி அருகே ஓணாப்பாளையம் சாலையில் கோபாலபுரம் விநாயகா் கோயில் வீதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில், இவா்களின் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாள்களுக்குள் இந்த வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வீட்டுக் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், அதிா்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் மாற்று வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளா் என்.செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.