கோவை: கோவையில் கொங்கலம்மன் திருக்கோயிலின் திருக்கல்யாண உற்சவ திருவிழாவில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஒயிலாட்டம் ஆடி அசத்தியது பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது.
கோவை சரவனம்பட்டியை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கொங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூன்றாம் ஆண்டு திருக்கல்யான உற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பூச்சாட்டுடன் தொடங்கிய திருவிழாவில் ஒரு வார நிகழ்வாக சக்தி கரகம் எடுத்தல், அம்மன் அழைத்தல், மாவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக கோயிலின் வளாகத்தில் சிம்மகுரல் கலை குழுவின் சார்பில் ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என வட்டமிட்டபடி ஆடி அசத்தியது பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம், அம்மன் திருவீதி உலா, சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


