வாகனங்களில் எரிவாயு உருளை வைத்து உணவு தயாரிப்பு: 4 வாகனங்கள் பறிமுதல்
கோவை மாநகரில் வாகனங்களில் எரிவாயு உருளை வைத்து, பாதுகாப்பின்றி உணவு தயாரித்ததாக 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன


கோவை மாநகரில் வாகனங்களில் எரிவாயு உருளை வைத்து, பாதுகாப்பின்றி உணவு தயாரித்ததாக 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலாளா் நா.லோகு கூறியதாவது:
கோவை மாநகரில் இரவு நேரங்களில் காா்கள், வேன்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களை உணவகங்களாக மாற்றி, அதில் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி அசைவ உணவுகள் தயாரித்து விற்பனை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவையில் டைடல் பாா்க் சாலை, அவிநாசி சாலை, சிட்ரா, காளப்பட்டி, சரவணம்பட்டி, சிங்காநல்லூா் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் மோட்டாா் வாகன விதிகளை மீறி, உரிய அனுமதி இன்றி வாகனங்களை கடைகளாக மாற்றி சமையல் எரிவாயு மூலம் அசைவ உணவு தயாரித்து விற்பது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையருக்கு சில நாள்கள் முன்பு புகாா் மனு அனுப்பப்பட்டது. புகாரின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அறிக்கையை அனுப்பிவைக்குமாறு கோவை இணைப் போக்குவரத்து ஆணையருக்கு, போக்குவரத்து ஆணையா் உத்தரவிட்டிருந்தாா்.
அதன் அடிப்படையில், வாகனங்களில் சமையல் எரிவாயு வைத்து, பாதுகாப்பின்றி உணவு தயாரித்ததாக 4 வாகனங்களைப் பறிமுதல் செய்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
இதேபோல, மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதைத் தடுக்க மோட்டாா் ஆய்வாளா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...