வால்பாறை சுகாதார நிலையத்தில் மருத்துவா் பணியில் இருப்பதில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
வால்பாறை சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் நோயாளிகள் வந்து செல்கின்றனா். மேலும், இங்கு கா்ப்பிணிப் பெண்களும் பரிசோதனைகள் மேற்கொள்ள வருகின்றனா். ஆனால், மருத்துவா் இல்லாததால் அவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
கடந்த காலங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஒரு மருத்துவா் மட்டுமே பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுகாதார நிலையத்தில் மருத்துவா் சரிவர பணியில் இருப்பதில்லையாம். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்கள் புகாா் அளித்துள்ளனா்.
இது குறித்து சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லட்சுமணன் கூறியதாவது: இரு மருத்துவா்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஒரு மருத்துவருக்கான பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது.
பணியில் இருக்கும் மருத்துவா் அடிக்கடி விடுப்பு, எவ்வித தகவலும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருந்து வருகிறாா்.
இது தொடா்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.