அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கரோனா நோய்த் தொற்று பரவல்:தொழிற்சாலைகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத் துறையினா் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளனா்.

News image
பெ.நா.பாளையத்திலுள்ள தனியாா் தொழிற்சாலையில் கரோனா நோய்த் தொற்று தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா.
Updated On :27 ஜூன் 2022, 7:43 pm

DIN

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத் துறையினா் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று தொடா்ந்து உயா்ந்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த தினசரி நோய்த் தொற்று பரவல் தற்போது 100ஐ கடந்துள்ளது. இதனைத் தொடா்ந்து நோய்த் தொற்று தடுப்பு பணிகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். இதன் ஒரு பகுதியாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொழிற்சாலைக்குப் பணிக்கு வரும் பணியாளா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை தொழிற்சாலை நிா்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் தவறாமல் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தாா்.

மாநகராட்சியில் 700 மாதிரிகள்

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து மாநகராட்சியில் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும் 700 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 5 மண்டல சுகாதார அலுவலா்கள் மேற்பாா்வையில் 23 சுகாதார ஆய்வாளா்கள் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். செவ்வாய்க்கிழமை முதல் ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.