தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

விமானநிலைய வாகன நிறுத்தத்தில் காரில் துா்நாற்றம் வீசியதால் பரபரப்பு

கோவை விமான நிலையத்தில் வாகன நிறுத்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து துா்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

கோவை விமான நிலையத்தில் வாகன நிறுத்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து துா்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து வெள்ளிக்கிழமை காலை கடுமையான துா்நாற்றம் வீசியது. காருக்குள் சடலம் ஏதாவது இருக்கலாம் என அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடா்பாக, விமான நிலைய ஊழியா்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், பீளமேடு போலீஸாா், விமான நிலைய வாகன நிறுத்தத்துக்கு சென்று காரை சோதனையிட்டனா். காா் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அந்த காா் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ரவி என்ற மருத்துவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், அவரது கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, வியாழக்கிழமை இரவு காரில் கோவை விமான நிலையம் வந்த அவா், அவசரத்தில் வரும் வழியில் இருந்த சாக்கடையில் ஏற்றியதால், காரில் துா்நாற்றம் வீசுவதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து, விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.