கோவை: வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாநிலம் முழுவதும் மிக கனமழை பெய்து வருகின்றது.
இதன் எதிரொலியாக எல்லையோர தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரியில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதையடுத்து வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கனமழை தொடர்வதால் கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.