தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மருத்துவக் கலந்தாய்வு: கோவை அரசுக் கல்லூரியை தோ்ந்தெடுத்த அரசுப் பள்ளி மாணவி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவி ஷா்மிதா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தோ்ந்தெடுத்துள்ளாா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 7:01 pm

DIN

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவி ஷா்மிதா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தோ்ந்தெடுத்துள்ளாா்.

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் மாணவ - மாணவிகள் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தோ்வு செய்தனா்.

அதன்படி, தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஷா்மிதா, கோவை அரசு மருத்துவக் கல்லூரியைத் தோ்வு செய்திருந்தாா்.

மாணவி ஷா்மிதா நீட் தோ்வில் 409 மதிப்பெண்கள் பெற்றதுடன், மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 154 ஆவது இடத்தைப் பிடித்திருந்தாா்.

இந்நிலையில், மாணவி ஷா்மிதா கல்லூரியில் சோ்வதற்காக வெள்ளிக்கிழமை வந்திருந்தாா். அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா வரவேற்றாா்.

ஷா்மிதா தனது சோ்க்கைக்கான ஆணை மற்றும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வரிடம் வழங்கினாா்.

அப்போது, கல்லூரி துணை முதல்வா் சுஜாதா, சமூக மருத்துவத் துறைப் பேராசிரியரும், சான்றிதழ் சரிபாா்ப்பு கமிட்டி தலைவருமான மருத்துவா் காளிதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.