சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சின்னவேடம்பட்டி ஏரியில் தீபமேற்றிய தன்னாா்வலா்கள்

கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீா்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏரியில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சின்னவேடம்பட்டி ஏரியில் தீபமேற்றிய தன்னாா்வலா்கள்.
Updated On :27 நவம்பர் 2023, 7:32 pm

DIN


கோவை: கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீா்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏரியில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரியை, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா்க்கரங்கள் கூட்டமைப்பு மற்றும் தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் இணைந்து, கடந்த 7 ஆண்டுகளாக புனரமைத்து வருகின்றனா்.

ஆண்டுதோறும், காா்த்திகை தீபத் திருநாளன்று சின்னவேடம்பட்டியில் நீா் நிரம்ப வேண்டி தன்னாா்வலா்கள் தீபமேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், நடப்பாண்டு ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திங்கள்கிழமை தீபங்கள் ஏற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா்க்கரங்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள், உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.