மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வேளாண் பல்கலைக்கழகத்தில் வங்கி அதிகாரிகளுக்கு பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நபாா்டு வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Updated On :27 நவம்பர் 2023, 7:45 pm


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நபாா்டு வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வங்கிப் பணியாளா் கல்லூரி இணைந்து ’டிஜிட்டல் விவசாயம், இணையம், புதுமையான வேளாண்மை’ என்ற தலைப்பில் நபாா்டு வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கின்றன.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநா் பி.பி.முருகன், வேளாண், ஊரக வளா்ச்சி ஆய்வுகள் மைய இயக்குநா் சுரேஷ்குமாா் ஆகியோா் வங்கி அதிகாரிகளுக்கு டிஜிட்டல் விவசாயத்தில் உள்ள சவால்கள், வாய்ப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்றடைவதற்கான அணுகுமுறை குறித்துப் பேசினா்.

தேசிய வங்கிப் பணியாளா் கல்லூரியின் பணியாளா்கள் இசக்கிமுத்து, பங்கஜ்குமாா், விரிவாக்கக் கல்வி இயக்குநரக பேராசிரியா் என்.ஆனந்தராஜா உள்ளிட்டோா் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.