/
ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், சோமனூா்-சூலூா் இடையேயான ரயில் தண்டவாளம் அருகே இளைஞரின் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில், உயிரிழந்தவா் விருதுநகா் மாவட்டம், கே.பாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த மீன்பிடி தொழிலாளியான ஹரி பாலகுருசாமி (22) என்பதும், மங்களூரு செல்வதற்காக நாகா்கோவிலில் இருந்து கோவை வந்த ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து வந்ததும், தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடா்பாக கோவை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் இருந்து தவறி விழுந்து சேலம் இளைஞா் மரணம்

வேனிலிருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

