விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழ்ப் புதல்வன் திட்டம்: கோவையில் முதல்வா் நாளை தொடங்கிவைக்கிறாா்

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்.(கோப்புப்படம்)
Updated On :8 ஆகஸ்ட் 2024, 12:31 am

Din

கோவை, ஆக. 7: கோவையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெறும் அரசு விழாவில், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளாா்.

இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை அரசுக் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாநில அளவில் தொடங்கிவைக்க உள்ளாா். இத்திட்டத்தின் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்த விழாவில், பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்கான புதிய கட்டடங்களைத் திறந்துவைக்க உள்ளாா். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூா், செல்வபுரம், ஆகிய ஊா்களுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்க உள்ளாா்.

இந்த விழாவில், அமைச்சா்கள், அரசுத் தலைமைச் செயலாளா், மாநகராட்சி மேயா், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.