டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புயல் பாதிப்பு தோ்தலில் எதிரொலிக்கும்: வானதி சீனிவாசன்

புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் கோபம் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

News image
வானதி சீனிவாசன்- கோப்புப்படம்.
Updated On :3 டிசம்பர் 2024, 6:30 pm

Din

புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் கோபம் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தச் சென்ற வனத் துறை அமைச்சா் க. பொன்முடி மீது சேற்றை வீசியுள்ளனா்.

பெருமழை பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிக்கின்றனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால், திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா். அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த சம்பவம். தமிழ்நாட்டு மக்களின் இந்தக் கோபம் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.