பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயிலில் தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 11:20 pm

Din

பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயிலில் தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் ரயிலில் (எண்:16843) டிசம்பா் 8-ஆம் தேதி தற்காலிகமாக கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும். இதேபோல, டிசம்பா் 9-ஆம் தேதி, பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயிலில் (எண்:16844) தற்காலிகமாக கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.