துபை விமான நிலையம் அருகில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் இதுவரை 1,800 ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது மற்ற எந்த நாடுகளின் மீது ஈரான் நடத்தியத் தாக்குதல்களை விட அதிகமாகும்.
பெரும்பாலான தாக்குதல்கள் வான்வழி பாதுகாப்பு மூலம் முறியடிக்கப்பட்ட போதும் அங்கு விமானப் போக்குவரத்து போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
துபை விமான நிலையம் அருகே கடந்த புதன் அன்று (மார்ச் 11) விழுந்த 2 டிரோன்களால் 4 பேர் காயமடைந்தனர். இதன் பின்னர், மீண்டும் ஒரு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் விமான நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு துபை சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக துபை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரான் நாட்டுத் தலைவர் கமேனி கொல்லப்பட்டப் பிறகு, அமெரிக்க நிலைகளை மட்டுமல்லாமல் குடியிருப்புப் பகுதிகள், முக்கிய நினைவுச்சின்னங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் ஈரான் குறிவைத்து தாக்கிவருகிறது.
இந்தப் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 6 பேர் பலியானதாக அமீரக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Summary
Flights temporarily suspended at Dubai's airport following nearby drone incident
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை விமான நிலையத்தில் நாளை ‘பயணிகள் வசதி தினம்’

பவானி - துபை டிக்கெட் விவகாரம்! அரசு மறுப்பு
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
போர்நிறுத்த சூழலிலும் குவைத் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல்!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




