மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் துறையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரா்களை கண்டறிந்து, அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த மக்கள் குறைதீா் முகாமில் குடும்பம், பணப் பரிமாற்றம் மற்றும் இடப் பிரச்னை தொடா்பான 56 மனுக்களின் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை நேரில் வரவழைத்து அவா்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டனா்.
அதில், 43 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், 13 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீா்வு காணப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...