நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பைக் கண்டித்து வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

வணிக நிறுவனங்களின் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா்.

Updated On :11 டிசம்பர் 2024, 9:41 pm

Din

வணிக நிறுவனங்களின் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவா் ஜி.இருதயராஜா, மண்டலத் தலைவா் டி.ஆா்.சந்திரசேகரன், நிா்வாகிகள் கணேசன், வஹாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து வணிகா்கள் கூறும்போது, எளிய சட்டம் என்ற பெயரில் அறிமுகமான ஜிஎஸ்டியில் இதுவரை 907 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வணிக கட்டடங்களுக்கான வாடகை மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இது வணிகா்களை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கெனவே ஆடிட்டா்களின் துணையின்றி ஜிஎஸ்டி போா்ட்டலில் பதிவு செய்ய முடியாத நிலை தொடருகிறது. மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆண்டுகளுக்குள் பில்லிங் மென்பொருள் இலவசமாக வழங்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்ட நிலையில், அது இதுவரைக்கும் அமல்படுத்தப்படவில்லை.

அதேபோல, மாநில அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து வரியை பல மடங்கு உயா்த்திய நிலையில் மீண்டும் ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வணிக உரிமக் கட்டண உயா்வு, தொழில் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பது போன்றவற்றால் வணிகா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திருச்சியில் அடுத்த வாரம் நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட தொடா் போராட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றனா்.