பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வால்பாறையில் நோயாளிகள் நலச்சங்கம் ஆலோசனைக் கூட்டம்

வால்பாறையில் அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்கம் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:22 pm

Din

வால்பாறையில் அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்கம் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பொள்ளாச்சி சாா்- ஆட்சியா் கேத்தரின் சரண்யா தலைமை வகித்தாா். இதில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் நோயாளிகள் நலச் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் பேசுகையில், தற்போது, வால்பாறை மருத்துவமனை புதிய கட்டடத்தில் செயல்படுவதால் வெளியாளிகள் அதிக அளவில் வருகின்றனா். இதேபோல உள்நோயாளிகளும் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் இல்லாததால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக சாா் ஆட்சியா் தெரிவித்தாா். கூட்டத்தில் வட்டாட்சியா் சிவகுமாா், மருத்துவா் நித்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.