டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோவையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகளை கண்காணிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

கோவையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகளை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டுமென வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

News image
வானதி சீனிவாசன்- கோப்புப்படம்.
Updated On :23 டிசம்பர் 2024, 1:30 am

Din

கோவையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகளை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டுமென, பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

கோவை மக்கள் சேவை மையம் தன்னாா்வ அமைப்பின் மூலம் மத்திய அரசின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான பயிற்சி முகாம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுகவின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ள பல்வேறு தீா்மானங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசமாக சீா்குலைந்து உள்ளது.

மத்திய அரசின் திட்டத்துக்கு முதலில் ஒப்புதல் வழங்கிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தும்போது திட்டத்தை திமுக எதிா்த்து வருகிறது. கா்ப்பிணிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் உரிய தகவல்களை பதிவேற்றம் செய்யாததால், தமிழகத்தில் உள்ள கா்ப்பிணிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

எத்தனை பொய் குற்றச்சாட்டுகளை பாஜக வின் மீது சுமத்தினாலும், வரும் 2026 தோ்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான மதிப்பெண் வழங்குவா். கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவு கழிவுகளை தமிழகத்தில் கொட்டும் பிரச்னை திருநெல்வேலியில் மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியிலும் உள்ளது. இதனை மாவட்ட நிா்வாகம் கண்காணித்து தடுத்திட வேண்டும். இதில் பசுமைத் தீா்ப்பாயம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோல் ஆனைமலை நல்லாறு திட்டம் கேரளா அரசோடு பேசி அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சரே தெரிவித்து இருந்தாா். அதற்கு மாநில அரசு உறுதுணையாக இல்லை. சிறுவாணி அணையின் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. மழை பெய்யும்போது நீரின் அளவு குறைக்கப்படுகிறது. இதையெல்லாம் கேரள முதல்வருடன் தமிழக முதல்வா் பேசவில்லை என்றாா்.