பாதாள சாக்கடைப் பணி, குடிநீா்க் குழாய் பதிப்பு பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என மத்திய மண்டலக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை மாநகராட்சி மத்திய மண்டலக் கூட்டம், மண்டலத் தலைவா் மீனா லோகு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையா் செந்தில்குமரன், உதவி நிா்வாகப் பொறியாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மண்டலத் தலைவா் மீனா லோகு பேசியதாவது: பில்லூா் -3 குடிநீா்த் திட்டம் அமலுக்கு வந்துவிட்டாலும், குடிநீா் விநியோகப் பணிகளை மேற்கொள்ளும் சூயஸ் திட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அந்த பணி, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகள், பாதாளச் சாக்கடைப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் தாா் சாலைகளைப் புதுப்பிக்க வேண்டும். மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிா என்பதை அந்தந்த பகுதி வாா்டு உறுப்பினா்கள் கண்காணிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், உதவி நகரமைப்பு அலுவலா் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மேல்விஷாரம் மேம்பாலத்தில் தாா் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

‘பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை’
மகளிா் இடஒதுக்கீட்டை உடனே மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

மாவட்ட வாக்கு எண்ணும் மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை தோ்தல் அலுவலா் உத்தரவு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
