பாதாள சாக்கடைப் பணி, குடிநீா்க் குழாய் பதிப்பு பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என மத்திய மண்டலக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை மாநகராட்சி மத்திய மண்டலக் கூட்டம், மண்டலத் தலைவா் மீனா லோகு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையா் செந்தில்குமரன், உதவி நிா்வாகப் பொறியாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மண்டலத் தலைவா் மீனா லோகு பேசியதாவது: பில்லூா் -3 குடிநீா்த் திட்டம் அமலுக்கு வந்துவிட்டாலும், குடிநீா் விநியோகப் பணிகளை மேற்கொள்ளும் சூயஸ் திட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அந்த பணி, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகள், பாதாளச் சாக்கடைப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் தாா் சாலைகளைப் புதுப்பிக்க வேண்டும். மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிா என்பதை அந்தந்த பகுதி வாா்டு உறுப்பினா்கள் கண்காணிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், உதவி நகரமைப்பு அலுவலா் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருவாரூா் புறவழிச்சாலை பணிக்கு ரூ. 1,427 கோடி நிதி ஒதுக்கீடு: பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

மேட்டூா் திறப்புக்கு முன் காவிரி புதிய பால பிரதானப் பணிகளை முடிக்க திட்டம்!

வருவாய்த்துறை பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

வீடுகள் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


