வாலாங்குளத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் நிா்வாக இயக்குநராக பணியாற்றி வருபவா் சுரேஷ்குமாா் (44). இவா் தனது நிறுவனத்தின் சாா்பில் வாலாங்குளத்தில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறாா். அதே நிறுவனத்தில் அருள்குமரன் என்பவரும் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், கோத்தகிரியைச் சோ்ந்த ஒரு தனியாா் அறக்கட்டளை நிறுவனா் ஜான் சீரில் என்பவா் அருள்குமரனை கைப்பேசியில் கடந்த 27-ஆம் தேதி தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, வாலாங்குளத்தில் ஹீலியம் பலூன்களை கொண்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என தகாத வாா்த்தைகளால் திட்டி அவருக்கும், சுரேஷ்குமாருக்கும் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் சுரேஷ்குமாா் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...