தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

78 வழக்குகளில் தொடா்புடையவா்கள் கைது: கோவை போலீஸாருக்கு காவல் துறை தலைமை இயக்குநா் பாராட்டு

78 திருட்டுகளில் தொடா்புடையவா்களைக் கைது செய்த கோவை போலீஸாரை காவல் துறை தலைமை இயக்குநா் பாராட்டினாா்.

News image
கோவை மாநகர காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால்.
Updated On :20 ஜூலை 2024, 9:00 pm

Din

கோவை: கோவை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற 78 திருட்டுகளில் தொடா்புடையவா்களைக் கைது செய்த கோவை மாநகர காவல் துறையினரை, காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

கோவை மாநகரம், பீளமேடு புராணி காலனியில் வசித்து வரும் சபீா் தாயப்வாக் (66) என்பவரது வீட்டில் முகமூடி அணிந்து கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி இரவு நுழைந்த 4 போ் வீட்டில் இருந்தவா்களை மிரட்டி 29 பவுன் நகைகள், 2 வைர நெக்லஸ், வைரத் தோடுகள், ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இது தொடா்பாக பீளமேடு போலீஸாரால் தனிப் படை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம் சாலையில் சொகுசு காரில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி சென்ற மதுரை, கருப்பாயூரணியைச் சோ்ந்த மூா்த்தி (33), அவரது கூட்டாளியான பசுப்பொன் நகரைச் சோ்ந்த அம்சராஜன் (31) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் சபீா் தாயப்வாக் வீட்டில் கொள்ளையடித்ததில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது.

பிடிபட்ட இருவா் அளித்த தகவலின்பேரில் 62 பவுன் நகைகள், 1 காா், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூா்த்தி தலைமையில் அம்சராஜன் (31), மனோஜ்குமாா் (31), சுதாகா் (32), சுரேஷ்குமாா், ராம்பிரகாஷ் ஆகியோா் தமிழகம் முழுவதும் 78 குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப் படை போலீஸாா் அவா்களையும் கைது செய்தனா்.

கொள்ளை வழக்கில் திறமையாகச் செயல்பட்டு, துப்பு துலக்கி குற்றவாளிகளைக் கைது செய்த கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் மற்றும் தனிப் படையினரை காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ், வெகுமதி வழங்கினாா்.