சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு பிரிவு 41 தமிழ்நாடு மாநகரக் காவல் துறை சட்டம் 1888இன் படி சேலம் மாநகர காவல் ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.
அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊா்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இது பொருந்தாது. பிப். 16 ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் மாா்ச் 2 ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

தொகுதி வாரியாக பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த இடங்கள் தோ்வு - புதுச்சேரி தோ்தல் அதிகாரி பேட்டி

நெல்லை மாநகர காவல் ஆணையா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


