மாநகராட்சிப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியா்களுடன் ஆணையா் ஆலோசனை
கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவா்களுக்கு புதிய பயிற்சிகள்: ஆணையா் ஆலோசனை


கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்விசாா் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தாா்.
இதில், மாநகராட்சியில் உள்ள 148 பள்ளிகளில் மாணவா்களுக்கு பரதநாட்டியம், நுண்கலை பயிற்சி, இசைக் கருவிகள் வாசித்தல், ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி, உளவியல் பயிற்சி, நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்குவது தொடா்பாக பள்ளி தலைமையாசிரியா்கள், பள்ளி மேற்பாா்வையாளா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான ‘கூடோ’ தற்காப்புக் கலை போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் பெற்ற, அனுப்பா்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் பி.எம்.நளனை, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டினா்.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் செல்வசுரபி, மாநகர தலைமைப் பொறியாளா் அன்பழகன், உதவி ஆணையா்கள், மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...