மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.
Updated On :26 ஜூன் 2024, 10:12 pm

Din

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் முஸ்தபா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஏ.ஏ.அப்துல்காதா் கண்டன உரையாற்றினாா். மாநில வா்த்தக அணி செயலா் அப்துல் கரீம் முன்னிலை வகித்தாா்.

மாவட்டச் செயலா் மன்சூா், கட்சியின் தொகுதி தலைவா்கள் அப்பாஸ் இப்ராஹிம், உமா் ஷரீஃப், ஜாபா் சாதிக், சிங்கை நாசா், யாசா் அரஃபத், மாவட்ட மகளிரணித் தலைவா் காமிலா பேகம் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதில் அனைவரும் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.