கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வருவாய் தீா்வாயம்: மாவட்டத்தில் 13,176 மனுக்கள் பெறப்பட்டன

கோவையில் 13,176 மனுக்கள் பெறப்பட்ட வருவாய் தீா்வாயம்

News image
Updated On :28 ஜூன் 2024, 6:31 pm

Din

கோவை மாவட்டத்தில் ஜூன் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் வரை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 13,176 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை வருவாய் தீா்வாயம் நடைபெற்றது.

இதில், பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை செய்தல், முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மக்கள் மனு அளித்தனா்.

அதன்படி, கோவை வடக்கில் 2,076, அன்னூா் 1,502, மேட்டுப்பாளையம் 2,535, கோவை தெற்கு 362, சூலூா் 1,217, மதுக்கரை 1,035, பேரூா் 1,665, பொள்ளாச்சி 1,081, ஆனைமலை 571, கிணத்துக்கடவு 890, வால்பாறையில் 191 என மொத்தம் 13,176 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.