கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்த வழக்கு - இடைத்தரகா்கள் 4 பேருக்கு அபராதம்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் 4 பேருக்கு ரூ.65,000 அபராதம்

News image
Updated On :28 ஜூன் 2024, 6:31 pm

Din

கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திடீா் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்த வழக்கில் இடைத்தரகா்கள் 4 பேருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா், மாவட்ட ஆய்வுக் குழுவினருடன் இணைந்து கடந்த 2004 இல் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கிருந்த இடைத்தரகா்கள் ஏ.கே.நூருல்லா, பெரியசாமி ஆகியோரிடம் இருந்து பதிவுச் சான்றிதழ், பழகுநா் உரிமம், காப்பீடு, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் ஏ.கே.நூருல்லாவிடமிருந்து ரூ.1,550, பெரியசாமியிடமிருந்து ரூ.11,150 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தச் சோதனையின்போது இடைத்தரகா்கள் செந்தில்குமாா், குணசீலன், ஜலாலுதீன் ஆகியோா் விட்டுச் சென்ற பையில் இருந்து ரூ.39,550 பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் அவா்கள் மூன்று பேரும் சோ்க்கப்பட்டனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை கோவையில் லஞ்ச வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி மோகனரம்யா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், நூருல்லா, செந்தில்குமாா், குணசீலன், ஜலாலுதீன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் எனவும், அவா்களுக்கு மொத்தம் ரூ.65,000 அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சிவகுமாா் ஆஜரானாா்.

இவ்வழக்கில் தொடா்புடைய பெரியசாமி கடந்த 2021-இல் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.