ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

News image
Updated On :15 மே 2024, 11:13 pm

Manivannan.S

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய்கள் விற்று பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் அரவைக் கொப்பரை கிலோ ரூ.111.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.120-க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி கொப்பரைக் கொள்முதல் மாா்ச் 14 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூா், கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு, காரமடை, செஞ்சேரி மலையடிப்பாளையம், சூலூா் மற்றும் தொண்டாமுத்தூா் ஆகிய 10 ஒழுங்குமுறைக் கூடங்கள் மூலமாக 31, 500 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும், 800 மெட்ரிக் டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், உற்பத்திச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம்.

வருகிற ஜூன் 10- ஆம் தேதியுடன் கொப்பரைக் கொள்முதல் முடிவடைய உள்ளதால், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.