ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்!

கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகியது பற்றி..

News image
செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியினர்.- Din
Updated On :22 நவம்பர் 2024, 7:08 am

DIN

கோவை: கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்ட செயலர் கே.அபிராமி, வணிகர் பாசறை மாவட்டச் செயலர் பி.செந்தில்குமார், தொழிற்சங்க செயலர் ஏழுமலை பாபு ஆகியோர் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசியதாவது:

"நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியின் கொள்கைக்கு முரணாக பேசி வருகிறார். அவர் தமிழ்த் தேசியம் பேசுவது, அருந்ததியர்களை வந்தேறிகள் என்று சொல்வது போன்றவையெல்லாம் ஏற்கத்தக்கவை இல்லை.

திராவிட பாரம்பரியம் வலுவாக உள்ள தமிழ்நாட்டில் சீமானின் கருத்துகள், பேச்சுகள் யாவும் எங்களைப் போன்ற நிர்வாகிகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றன.

சீமானுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளின் குறைகளை பிரச்னைகளை கேட்கவும், சரி செய்யவும் கட்சியில் ஆள் இல்லை. களத்தில் இருப்பவர்களின் பிரச்னைகள் சீமானை சென்றடைவதில்லை. வேலைக்கான அங்கீகாரம் எங்களுக்கு கிடைப்பதில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுத்தாலும் பெண் நிர்வாகிகளின் கருத்துகளை அவர் ஏற்பதில்லை. எனவே அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்து இருக்கிறோம்.

எங்களைப் போலவே தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் அவர்கள் அடுத்து எந்த கட்சிக்கு செல்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எங்களின் விலகலை முறைப்படி மண்டல நிர்வாகிகளுக்கு தெரிவித்துவிட்டோம்" என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.