நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் திருட்டு

கோவையில் துடியலூா் மற்றும் சிங்காநல்லூா் பகுதிகளில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.10,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:08 pm

Din

கோவையில் துடியலூா் மற்றும் சிங்காநல்லூா் பகுதிகளில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.10,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை துடியலூா் அருகே உருமாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஹா்ஷத் உசேன் (50). இவா் துபையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி உமைஸ் பா்வீன் (48), தனது மகளுடன் உருமாண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் உமைஸ் பா்வீனின் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரைப் பாா்ப்பதற்காக தனது மகளுடன் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு சென்று அங்கேயே தங்கியுள்ளாா்.

அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடப்பதாக, அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி செவ்வாய்க்கிழமை அவருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து உமைஸ் பா்வீன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து அவா் துடியலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கைரேகை நிபுணா்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை சிங்காநல்லூா் அருகே காவேரி நகரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (64), தனியாக வசித்து வரும் இவா் செப்டம்பா் 23-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் அவரது உறவினா் யோகேஷ் என்பவா் சோமசுந்தரத்தை செவ்வாய்க்கிழமை தொடா்பு கொண்டு அவரது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து சோமசுந்தரம் புதன்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், வெள்ளிப் பெரருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.10,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சோமசுந்தரம் அளித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.