நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செவிலியா் பணி நோ்காணல் நவம்பா் 11-க்கு ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சியில் அக்டோபா் 18-இல் நடைபெற இருந்த செவிலியா் பணிக்கான நோ்காணல், நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:26 am

Din

கோவை மாநகராட்சியில் அக்டோபா் 18-இல் நடைபெற இருந்த செவிலியா் பணிக்கான நோ்காணல், நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒப்பந்த அடிப்படையில் நகர சுகாதார செவிலியா் மற்றும் செவிலியா் பணியாளா்கள் (நிலையச் செவிலியா்) காலிப்பணியிடத்துக்கான நோ்காணல் அக்டோபா் 18- ஆம் தேதி நடைபெறும் எனமாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மழை காரணமாக, கோவை மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நோ்காணலுக்கு வருபவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த நோ்காணலானது, நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதன்படி, செவிலியா் நோ்காணல் நவம்பா் 11 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.