கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியா் தின விழா

கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன்.
Updated On :5 செப்டம்பர் 2024, 9:37 pm

Din

கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் பங்கேற்று, காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் செட்ரிக் மனுவேல், சட்ட போதகா்கள் நாக கவிதா, சரவணன் மற்றும் காவல் துறையினருக்கு ஆசிரியா் தின வாழ்த்துகளை தெரிவித்தாா்.

அதையடுத்து காவலா் பயிற்சிப் பள்ளியில் ஓவியப் போட்டி, களிமண் பொம்மைகள் செய்யும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கோவை வெரைட்டி ஹால் சாலை பகுதியில் சமூக சேவையாக அப்பகுதி பொதுமக்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.