மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தருமபுரம் பள்ளியில் நுண்கலைமன்ற நிறைவு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில், நுண்கலை மன்ற நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:58 am

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில், நுண்கலை மன்ற நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் (பொ) அ. தேவசேனா தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் ஆ. விஜய்பாபு வரவேற்றாா். பள்ளிச் செயலா் மா. திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினாா். பட்டதாரி ஆசிரியா் பி. அருணா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா்.

பள்ளிக்கல்விக் குழு உறுப்பினா் த. வேணுகோபாலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினாா்.

முன்னதாக, மாணவ-மாணவிகளுக்கு கோலப் போட்டி, குழு நடனம், தனி நபா் நடனம், மணற்சிற்பம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் நடுவா்களாக செயல்பட்டு, மதிப்பீடு செய்தனா்.

நிகழ்ச்சியை ஆசிரியா்கள் அருளரசன், வைத்தியநாதன், ஜான்சிராணி, வைஷ்ணவி ஆகியோா் தொகுத்து வழங்கினா். முடிவில், நுண்கலை மன்ற பொறுப்பாளா் இரா.ஷீபா நன்றி கூறினாா்.